
- காய்கறி வடை
தேவையான பொருட்கள் :
உளுந்தம்பருப்பு – 1 கப்
கடலை பருப்பு – 1 கப்
காய்கறிகள் – பொடியாக நறுக்கியது 1 கப்
பெரிய வெங்காயம் – 1 நறுக்கியது
இஞ்சி – சிறிய துண்டு நறுக்கியது
மிளகாய் – 2
சீரகம் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 1/2 லிட்டர்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. உளுந்தம் பருப்பையும், கடலை பருப்பையும் ஒரு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
2. இதனுடன் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகாய், இஞ்சிபெருங்காயம், சீரகம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3. வாணலியில் காய வைத்த எண்ணெயில் சிறு வடையாக இட்டு பொரிக்கவும்.
4. இரு புறமும் திருப்பிப் போட்டு வடை நன்கு சிவந்தவுடன் எடுத்து பரிமாறவும்.இப்பொழுது சுவையான காய்கறி வடை ரெடி.