
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ஆட்டோ ஓட்டுனர் வேyன் என்பவரின் 11 வயது மகள் மற்றும் ஏழு வயது மகன் கடத்தப்பட்டுள்ளதாக பரபரப்பு புகார் அளிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஓழ.லூர் பகுதியை சார்ந்தவர் வேலன் இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி 11 வயதில் மகள் மற்றும் ஏழு வயதில் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். தனது குடும்பத்துடன் இவ்வாறு தனது வீட்டில் வசித்து வந்தார் .வேலனின் குழந்தைகள் இருவரும் ஓழலூர் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து இருவரும் வெளிய வரும்போது காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் குழந்தைகள் இருவரையும் கடத்தி சென்றனர். இது குறித்து பள்ளியின் ஆசிரியர் அளித்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வெளியான ஒரு தகவலின் அடிப்படையில் வேலனுக்கும் அவரின் மனைவிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேலவனின் மனைவி குழந்தைகளை கடத்தி சென்றாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகள் கடத்தப்பட்ட பள்ளியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தான் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. காவல் கண்காணிப்பாளர் அலுவலகமும் அங்குதான் அமைந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.