
அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றம் வழங்கி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்..
இந்த நிலையில் தொடர்ந்து அவரது தரப்பில் ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்து வந்த நிலையில் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது, செந்தில் பாலாஜி மீண்டும் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் செந்தில் பாலாஜிக்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வு துறை ஒதுக்கப்பட்டது, இந்த நிலையில் சட்ட விரோத பண பரிமாற்றம் வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி வருகிறார் இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணை ஒத்திவைக்க கோரியது செந்தில் பாலாஜி தரப்பு இதனை ஏற்று நீதிபதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார் மேலும் மேற்கொண்ட அவகாசம் கேட்கக்கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்..!!