சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!!

சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது…

தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வரும் ஈரப்பத காற்று இந்திய பகுதிகளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகியவற்றால் ஏற்படும் காற்று குவிதலால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் கனமான மலை பெய்து வருகிறது, இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும், அது அடுத்தடுத்து இரண்டு தினங்களில் மேற்கு திசையில் தமிழக இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும், இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது..!!

Read Previous

கண் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை தேவை ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தல்..!!

Read Next

வெளிப்படை தன்மையுடன் அறிக்கை வழங்க எடப்பாடி பழனிசாமி உத்தரவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular