சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!!

சென்னை சென்ட்ரல் கூடூர் மார்க்கத்தில் தடா சூலூர் பேட்டை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது..

சென்னை சென்ட்ரல் சூளூர்பேட்டைக்கு நவம்பர் 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 5:15 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் ஆவடி சென்னை சென்ட்ரலுக்கு நவம்பர் 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 6:40 மணிக்கு புறப்படும் மின்சாரவையில் சூலூர் பேட்டை நெல்லூருக்கு குறிப்பிட்ட நாள்களில் காலை 7:55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நெல்லூர் சூளூர்பேட்டைக்கு அதே நாட்களில் காலை 10:20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சூளூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு அதே நாட்களில் நண்பகல் 12:35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன, பகுதி ரத்து சென்னை சென்ட்ரல்- சூலூர்பேட்டை நவம்பர் 9, 12 ஆகிய தேதிகளில் காலை 4:15, 15.00 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் எளாவூர் சூளூர்பேட்டை இடையே பதி ரத்து செய்யப்பட உள்ளன, சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு நவம்பர் 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 6:45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சூளூர்பேட்டை- எளாவூர் இடையே ரத்து செய்யப்பட உள்ளது, சூலூர்பேட்டை- சென்னை கடற்கரைக்கு நவம்பர் 7, 9, 12 ஆகிய தேதிகளில் காலை 7:25 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் சூளூர்பேட்டை- எளாவூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது இந்த தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..!!

Read Previous

கடலுக்கும் வானத்திற்கும் நடுவே ஜொலிக்கும் அழகு. பாம்பன் பாலத்தை ரசிக்கும் பயணிகள்..!!

Read Next

தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணிப்பது நியாயமா தமிழக முதல்வருக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular