‘’பென்சில் போல் வாழ்ந்தால்..’’
❤️ஒருவனுடைய உழைப்பு என்றுமே வீணாவதில்லை. அவன் எதிர்பார்த்த பலன் உடனே கிடைக்காமல் இருக்கலாம்.
❤️பலன் கிடைக்கவில்லையே என்று மனம் தளர்ந்து உழைப்பதை விட்டு விடக்கூடாது.
❤️பல மாதங்கள் தொடர்ந்து உழைத்து வந்தால் பெரிய பெரிய வெற்றிகளை நம்மால் பெற முடியும்.
❤️ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார்..
❤️வெற்றிக்கு யார் உங்களுக்கு வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள்.
❤️”இவர் தான்” என்று சுட்டிக் காட்டினார். அவர் காட்டிய திசையில், தங்க பிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்!
❤️நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், இந்தப் பென்சில் எனக்கு ஐந்து செய்திகளைக் கற்றுத் தந்தது.
❤️பல கருத்துக்களையும், சிந்தனைகளையும் எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.
❤️அவ்வப்போது நாம் அதை சீவுகிறோம். சீவும் போது எல்லாம் கூர்மையடைகிறது.
❤️தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.
❤️வெளியே எப்படி இருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.
❤️சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டு இருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது.
❤️இதைப் பார்த்துத் தான் என் வாழ்க்கையை நான் சீர் செய்து கொண்டேன்.
❤️பல அரிய செயல்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு இருக்கிறேன்..
❤️சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.
❤️தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.
❤️வெளிச்சூழலில் புகழ் வந்தாலும், பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.
கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
❤️காலத்தில் நம் சுவட்டைப் பதித்து விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்..
ஆம்.,
🌹அடக்கம் தான் வாழ்வின் மிகப்பெரிய செல்வம்…
அடக்கம் நம்மை உயர்ந்த இடத்தில் வைக்கும்.
செய்தது தவறு என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்கவும் தயங்காதீர்கள்.
கடின உழைப்பு ஒன்று தான் ஒருவனை வெற்றியை நோக்கி கைப்பிடித்து அழைத்துச் செல்லும்.
🌹🌹🌹🌹🌹🌹




