சைவத்திலும் அசைவம் இருப்பது இன்னும் பலர் நம்மில் பல அதிசயங்களை சமையல் மூலம் நிரூபணம் செய்து கொண்டிருக் கின்றனர், அந்த வகையில் சேப்பக்கிழங்கு கறி வறுவலை பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்…
சேப்பக்கிழங்கு கறி வறுவல் செய்து சாப்பிடுவதன் மூலம் நமது உடல் மற்றும் உடல் சார்ந்த நோய்கள் நீங்கும் என கூறுகின்றனர் முன்னோர்கள், சேப்பக்கிழங்கு கறி குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம் முதலில் சேப்பகிழங்கு கால் கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும், ஓமம் அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும், கடுகு அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும், மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும், தனியாத்துள் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும், உப்பு தேவைக்கேற்ப எண்ணையும் தேவைக்கேற்ப, சேப்பக்கிழங்கு கறி வறுவல் செய்வது எப்படி என்று முதலில் பார்ப்போம், முதலில் சேப்பக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும், கடாயில் எண்ணெய் ஊற்றி சேப்பக்கிழங்கை போட்டு பொரித்து எடுக்கவும், கிழங்கு பொன் நிறம் ஆனதும் தனியாக எடுத்து வைக்கவும் பிறகு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் ஓமத்தை போட்டு பொரிய விட வேண்டும், புரிந்ததும் சேப்பக்கிழங்கை சேர்த்து மிளகாய் தூள் தனியா தூள் உப்பு மற்றும் மஞ்சத்தூள் சேர்த்து நன்றாக வதக்கி சிறிது நேரம் வேகவிட்டு சுவை பார்த்து இறக்கவும், சுவையான சேப்பக்கிழங்கு கறி தயார் இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் இதை சாதம் சாம்பார் உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும், சேப்பக்கிழங்கு அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் மூட்டு வலிகள் முழங்கால் வலிகள் மற்றும் எலும்பு சார்ந்த எந்தவிதமான வழிகளும் மிக விரைவில் நீங்கும்..!!




