சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டினம் அருகே, குள்ளம்பட்டியைச் சேர்ந்த மணிவேல் என்பவரின் மனைவி மகேஸ்வரி. இவர் வளர்த்து வந்த நாயை, அதே பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். மகேஸ்வரியின் புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் நந்தகுமாரை கைது செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.




