சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற தனியா் சொகுசுப் பேருந்து, புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் அருகே நேற்று (டிச., 30) அதிகாலை மணல் ஏற்றிவந்த லாரியை முந்த முயன்று மோதியதில், லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியும் சேதமடைந்தது. இதில் பேருந்தில் பயணித்த 7 பயணிகள் மற்றும் லாரி, பேருந்து ஓட்டுநர்கள் என மொத்தம் 9 பேர் காயமடைந்தனர்.




