ஜலதோஷம் பிரச்சனை உங்களுக்கு வருவது போல் இருந்தால் உடனே இதை மட்டும் செய்ய போதும்..!!
குறிப்பாக பலருக்கும் இடம் விட்டு இடம் சென்றாலும் நாம் குடிக்கும் தண்ணீரை விட்டு வேறு இடங்களுக்கு சென்று அந்த தண்ணீரை குடித்தாலும் ஜலதோஷம் ஏற்படும் தொண்டை கரகரப்பு ஏற்படும் சளி போன்ற பிரச்சனைகள் வரும். இந்நிலையில் இதனை வீட்டிலேயே இயற்கையான முறையில் எப்படி சரி செய்யலாம் என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
ஜலதோஷம் வருவது போல் தொண்டை கரகரப்பாக இருந்தால் அல்லது ஜலதோஷம் இருமல் சளி வந்துவிட்டால் ஒரு வெற்றிலையில் 5 மிளகு ஒரு சிட்டிகை மஞ்சள் ஒரு சிறிய கல் உப்பு சேர்த்து நன்றாக மென்று உமிழ்நீரோடு சாப்பிட வேண்டும் அதன் பிறகு குறைந்த பட்சம் 30 நிமிடத்திற்கு தண்ணீர் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது இது மிகச் சிறந்த கிருமி நாசினி இரவு உணவிற்கு பின் இந்த மருந்தை எடுத்துக் கொள்வது கூடுதல் சிறப்பு. எனவே கண்டிப்பா இதை மட்டும் ஃபாலோ பண்ணி பாருங்க.




