
விவாகரத்து கேட்டு நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் முக்கிய ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது…
கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர், இவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர் 15 ஆண்டு கால திருமண உறவு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது, இதனால் இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர், இந்த நிலையில் தனது மனைவி ஆர்த்தியுடன் திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்திருந்தார், இந்த நிலையில் மனைவியிடம் இருந்தது விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார், அதில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் 2009 ஆம் ஆண்டு பதிவு செய்த தங்கள் திருமண பதிவு ரத்து செய்ய வேண்டுமென கோரி இருந்தார் இந்த வழக்கு சென்னை மூன்றாவது உச்சநீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்த போது ஜெயம் ரவி நேரில் ஆஜராகி இருந்தார் அவரின் மனைவி ஆர்த்தி காணொளி காட்சி மூலமாக ஆஜராகினர், இதை தொடர்ந்து இருவருக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக குடும்ப நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தின் மூலமாக இன்றைய தினமே பேச இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார், அங்கு எடுக்கப்படும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்..!!