டிஜிபி பெயரில் சென்னை பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! தீவிர சோதனையில் போலீசார்..!!

இயல்பாகவே மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர்கதை ஆகிவிட்டது. அந்த வகையில் இன்று சென்னை ஆர்.ஏ.புரத்தில் இயங்கும் தனியார் பள்ளி ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது டி.ஜி.பி சங்கர் ஜிவால் பெயரில் போலி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

மிரட்டலை அடுத்து பட்டினப்பாக்கம் போலீசார், வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து இமெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் குஜராத் மற்றும் டெல்லியில் உள்ள ஏராளமான பள்ளிகளுக்கு இ – மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read Previous

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் திருட்டு திருடியவரை கைது செய்தது நாமக்கல் மாவட்ட காவல்துறை..!!

Read Next

துளசி செடியை பிறருக்கு பரிசாக கொடுக்கலாமா?.. கூடாதா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular