
நிறைய பேருக்கு டீ என்றால் மிகவும் பிடிக்கும். தலைவலித்தாலும் சரி அழுத்தம் இருந்தாலும் சரி டீயை மக்கள் விரும்பி குடிப்பார்கள். ஆனால் சொந்தமாக டீ போட்டால் நிறைய பேருக்கு சுவையாக வருவதில்லை. ஆகையால் டீயை எப்படி சுவையாக செய்வது என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
தேவையான பொருட்கள் :
கெட்டியான சுத்தமான பால் – 1/4 லிட்டர்
ஏலக்காய் – 5
சீனி – 2 ஸ்பூன்
தேயிலை – 2 ஸ்பூன்
இஞ்சி – ஒரு துண்டு
செய்முறை :
ஒரு பாத்திரத்தை எடுத்து பாலை நன்றாக கொதிக்க வைத்து மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தேயிலை இஞ்சி ஏலக்காய் ஆகியவற்றை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
பிறகு ஏற்கனவே கொதிக்க வைத்துள்ள பாலை அந்த கலவையில் ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வடிகட்டவும். அதுமட்டுமில்லாமல் டிகாஷன் போட்டு வெகு நேரம் டீயை கொதிக்க வைத்தால் சுவை மழுங்கடித்து விடும். அவ்வளவுதான் சுவையான டீ தயார்.