டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர் நபிதான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது தாயாரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் காரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது. உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்த நாட்டையே உலுக்கிய பயங்கரவாத தாக்குதல் கடந்த திங்களன்று (நவ., 10) நடந்தது குறிப்பிடத்தக்கது.




