தக்காளிக்கு போலீஸ் பாதுகாப்பு..!!

தெலுங்கானாவில் இன்று ரூ.25 லட்சம் மதிப்புள்ள தக்காளியை ஏற்றி சென்ற லாரி கர்நாடகாவில் இருந்து டெல்லி சென்ற போது சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை தொடர்ந்து தக்காளியை பொதுமக்கள் அள்ளி செல்லாமல் இருக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தக்காளி விலை கடந்த சில நாட்களாக கடுமையாக விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தக்காளி கடைக்காரர் பவுன்சரை பாதுகாப்புக்கு வைப்பதும், தக்காளி வியாபாரத்தில் அதிக லாபம் கொண்ட விவசாயி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது உட்பட பல சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Read Previous

கரிவலம்வந்தநல்லூரில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் செல்போன் திருட்டு..!!

Read Next

ஆதார் நிறுவனத்தில் வேலை ரெடி..!தேர்வு கிடையாது..! விண்ணப்பிக்க நாளை இறுதி தேதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular