
திருமங்கலம் அருகே கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் 32 கூலி தொழிலாளி இவருடைய இரண்டு வயது குழந்தை ருத்ரபாண்டி இவர் ராயபாளையத்தில் நடைபெற்ற விழாவிற்காக குடும்பத்துடன் சென்றிருந்தனர் உறவினர் வீட்டில் குழந்தை அங்கு இருந்த தின்னரை குடிநீர் என நினைத்து தவறுதலாக குடித்துள்ளார்.
இதில் மயக்கம் அடைந்த குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது.
இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.