தந்தையைப் பற்றிய அருமையான கண்ணீர் வர வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Oplus_131072

1.♥தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்!

2.♥தந்தையின் கண்டிப்பை பொறுத்துக் கொள்ளுங்கள்!
அதனால் உங்களுக்குத் தான் மரியாதை கிடைக்கும்!

3.♥தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்!
அப்படிச் செய்தால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யும்!

4.♥தந்தை சொல்வதைக் கவனமாக கேளுங்கள்!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலைமை வரக்கூடாது!

5.♥தந்தைக்கு முன்பு பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்!
அதனால் இறைவன் மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியம் அளிப்பான்!

6.♥தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்!
அவரது ஒவ்வொரு அனுபவத்தையும் ஒரு பாடமாக எண்ணி நீங்கள் பயனடைந்து கொள்ளுங்கள்!

7.♥தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக் கூடியவர்!

8.♥தந்தை மிகவும் அழகான முறையில் நம்மைப் பாதுகாக்க கூடியவர் ஆவார்!

9.♥முகம் தெரியாத யார் யாருக்கோ மரியாதை செய்கிறோம்!
உன்னைக் கொஞ்சி வளர்த்த தந்தைக்கு மரியாதை செய்!

10.♥உன் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விடாதே!
ஏனெனில் தாய் தன் பிள்ளை பத்திரமாக இருக்கவேண்டும் என்று எண்ணி, தன் இடுப்பில் தூக்கி வைத்துக் கொள்வாள்;
ஆனால் தந்தையோ, தான் பார்க்காத உலகத்தை தன் பிள்ளை பார்க்கட்டும் என்று தன் தோளில் தூக்கி வைத்துக் காட்டுவார்!

♥அவர் உன் அருகில் இருக்கும்போது பயன்படுத்திக் கொள்!
தந்தையைப் போல் உண்மையான நண்பன் உலகில் யாரும் இல்லை!

Read Previous

உங்கள் உடலுக்கு அதிக தண்ணீர் தேவை என்பதற்கான 10 ஆபத்தான அறிகுறிகள்..!!

Read Next

குழந்தைகள் முன்பு உடை மாற்றுவதை தவிர்க்க வேண்டும்.. ஏன் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular