
கோவை: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 43 வயதான ஆனந்தகுமார், இவரது தந்தை 72 வயதான குமாரசாமி, கோவை டவுன்ஹால் பகுதியில், தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி, வருகிறார்,
கடந்த ஒரு மாதமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார், இந்த நிலையில் நேற்று டவுன்ஹால் அடுத்த ராஜ விதி பகுதியில் திடீரென்று மயங்கி விழுந்தார், அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்,
இதுகுறித்து அவரது மகனுக்கு ஆனந்தகுமார், நேற்று உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.