
மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர் பகுதியை சார்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பவை “வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட தனது மகன் கிஷோர் (வயது 12) என்பவரை மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தேன். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் குடல் வாள் அலர்ஜி ஏற்பட்டு இருப்பதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுத்தினார். அறுவை சிகிச்சைக்கான பணத்தை செலுத்திய பின் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் அபிநவ் என்பவர் அறுவை சிகிச்சை முன் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்தார்.
பின் தன் மகன் கிஷோர் சந்திக்க மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை, மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கிஷோர் இறந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து தனியார் மருத்துவமனையின் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவே தன்னுடைய மகன் உயிரிழப்பிற்கு காரணமான மருத்துவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்”, என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகி அரசியல் செல்வாக்கு உள்ள மருத்துவர்கள் மருத்துவமனையில் பணியாற்றுவதால் மருத்துவ நிர்வாகத்தினர் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அறுவை சிகிச்சையின் போது செலுத்தப்பட்ட மயக்க மருந்து அதிகமாக இருந்ததன் காரணத்தினால் உயிரிழந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது .
இதை கேட்ட நீதிபதி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மயக்கவியல் மருத்துவர் அபிநவ் ஏன் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க செய்தார்.? அவர் மீது பணி நீக்க நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்படவில்லை..? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இதற்கு மயிலாடுதுறை ஆட்சியர் ,மருத்துவ கல்வி இயக்க இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.