தபால் துறையில் காலிப்பணியிடங்கள்..!! வெளிவரப்போகும் ரிசல்ட்டுகள்..!!

நமது இந்தியா முழுவதும் உள்ள அஞ்சல் துறையில் 44,228 இடங்கள் காலியாக இருப்பதாக அரசு அறிவித்து அதற்கான விண்ணப்பங்கள் கடந்த 5ம் தேதி வரை பெறப்பட்டு வந்தது. அதாவது இந்தியா முழுவதும் உள்ள தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் , உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் , டக் சேவக் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல் வெளியானது.

இத்தகைய பணியிடங்களுக்கு 10-வதில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் . இந்த பதவிகளுக்கு எந்த விதமான தேர்வு மற்றும் நேர்காணல் கிடையாது. மேலும் நல்ல கணினி அறிவு மற்றும் வாகனங்கள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த வேலைக்கு 18 முதல் 40 வரை மட்டுமே வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மேலும் இட ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் உள்ளது.

இத்தகைய பணிகளுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் விவரம் அதிகாரபூர்வமான (https://indiapostgdsonline.gov.in/) என்ற இணையத்தளத்தில் வெளியாக உள்ளது.

Read Previous

தங்கலான் படத்தில் நடித்த மாளவிகாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?..

Read Next

குழந்தைகளுக்கு ஆதார் கார்டை 2 முறை புதுப்பிக்க வேண்டும்..!! அரசு கொடுத்த முக்கிய தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular