இந்திய தபால் துறையானது நாட்டு மக்களுக்கு உத்திரவாதமான லாபத்தை அளிக்கும் வகையிலான பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் சேமிப்பதற்கு ஒரு சூப்பர் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் 2 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் அதற்கென்று தனி வட்டி வருமானம் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் உங்களால் கூட்டுக் கணக்கையும் திறக்க முடியும்.
ஒரு முறை முதலீடு செய்தல் 5 ஆண்டுகள் வரை வட்டி வழங்கப்படும். தற்போது POMIS திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. தனிநபர் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிகபட்சமாக 9 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கூட்டு கணக்கு வைத்திருப்பவர்கள் 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்ய முடியும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த அசல் தொகையையும் நீங்கள் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது நீங்கள் விருப்பப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின் டெபாசிட் தொகையை நீட்டித்துக் கொள்ள முடியும்.




