தமிழகத்தில் தாமதமாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! வானிலை மையம் தகவல்..!!

தமிழகத்தில் கடந்த நவம்பர் 7ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று (நவ.11) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவ, 13ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும், அடுத்த 36 மணி நேரத்திற்குள் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்து வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Read Previous

படித்ததில் பிடித்தது: யார் மீதும் எப்பொழுதும் பொய்சாட்சி சொல்ல கூடாது..!!

Read Next

பைக்கில் சென்றவரிடம் செல்போன் பறிப்பு..!! 3 பேர் கைது..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular