
- பொது இடங்களில் காவல்துறை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் நாட்டில் நடக்கும் அனைத்து விதமான குற்றங்களுகிகும்,சாதி மற்றும் மத கருத்துகளை பரப்புவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள், மணிக்கு மணி, நொடிக்கு நொடி அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக காவல்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின் பொது இடங்களில் காவல்துறை, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
தற்போது தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து விசாரணை நடத்தி சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
சொத்து தொடர்பான குற்றங்களை முழுமையாக விசாரித்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . சமூக வலைதளங்களில் சாதி மற்றும் மதம் உள்ளிட்ட கருத்துக்களை பரப்புவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.