
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறு போல் ஓடிக் கொண்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள வானகரத்தில் இன்று பாஜக மாநில செயற்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வேண்டும் என்பது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “சுவையான மாம்பழம் இருக்கும் மரத்தில் கல்லடி பட தான் செய்யும். தமிழகத்தில் பாஜக வேதர் வேதாளம் தாக்குதல் தற்பொழுது அதிகரித்துள்ளது தமிழகத்தில் கொலை கொலை என்பது இயல்பான ஒன்றாய் மாறிவிட்டது. சாதாரணமான மனிதனின் உயிருக்கும் உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது”, என்று குற்றம் சாட்டியுள்ளார்.