
திருப்பூர் மாவட்டத்தில் இறந்த மூதாட்டியின் உடலை மின்மயானம் வரை எடுத்துச் சென்று அவருக்கு இறுதி சடங்கு பெண்களை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சார்ந்தவர் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார். இவரது பெரியம்மா இந்ராணி இவர் வயது மூப்பின் காரணமாக கடந்த ஐந்தாம் தேதி அன்று காலமானார். இவரது உடலுக்கு திராவிட கழகத்தை சார்ந்த ஏராளமான பெண்கள் அஞ்சலி செலுத்திய உள்ளனர்.
பின் மூதாட்டி உடலை வீட்டிற்கு வெளியே எடுத்து வந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டி உடலை ஆம்பளத்தில் இருந்து இறக்கி மின் மயானத்தில் வைத்து கொல்லி வைத்துள்ளனர்.
பொதுவாக மின் மயானத்திற்கு ஆண்கள் மட்டுமே அதிக அளவில் சென்று இறந்தவர்களின் இறுதி சடங்கினை செய்வது வழக்கம். ஆனால் பெண்கள் உயிரிழந்த மூதாட்டி உடலை வீட்டில் இருந்து மின் மயானம் வரை எடுத்து சென்று ஆண்கள் செய்யும் அனைத்து சடங்குகளையும் செய்து வழக்கத்தை மாற்றி அமைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.