
மே 8ஆம் தேதி ஐபிஎல் நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். காரணம் தொழில்நுட்ப கோளாறுகளும் இந்தியா பாகிஸ்தான் போரும் தான். ஏனெனில் அந்தப் போட்டி நடந்தது தரம்சாலா மைதானத்தில். அந்த மைதானம் எல்லை பகுதிக்கு அருகில் இருப்பதன் காரணத்தினால் மக்களின் பாதுகாப்பிற்காகவும் அங்குள்ள வீரர்களின் பாதுகாப்பிற்காகவும் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு அனைவரையும் வீட்டிற்கு செல்ல கூறினார்கள்.
பொதுமக்கள் வீட்டுக்கு சென்று இருந்தாலும் அங்கு இருந்த வீரர்களும் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் சப்போர்ட் ஸ்டாப்புகள் போன்ற பல பேர் தர்மசாலாவிலேயே சிக்கிக்கொண்டனர். காரணம் இந்திய அரசு 25 விமான நிலையங்களை நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் செய்வதறியாத திகைத்த வீரர்களுக்கு இந்திய அரசு ஒரு உதவி செய்துள்ளது.
அவர்களுக்காக மட்டும் ஒரு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு அவர்களை பத்திரமாக நேற்று டெல்லிக்கு வர வைத்தனர். மேலும் ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைத்திருக்கும் காரணத்தினால் வீரர்களின் உயிர் மிகவும் முக்கியம். சர்வதேச வீரர்களுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அதற்கு இந்தியா தான் பதில் சொல்ல வேண்டும். அரசின் இந்த செயலுக்காக அனைத்து வீரர்களும் கிரிக்கெட் ஆணையமும் நன்றி கூறி வருகிறது.