இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர் சிலருக்கு வழுக்கை பிரச்சனையும் உண்டு…
முடி உதிர்வு தடுக்க கேரட் எலுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்துவர முடி நன்றாக வளரும், சீதாபழ விதைகளை காய வைத்து பொடியாக்கி சீகைக்காயில் கலந்து குளித்து வர பேன் ஈறு ஒளியும் கூந்தலும் மிருதுவாகும், அரளி பூவை தலையில் வைத்துக் கொண்டால் பேன் தொல்லை அகலும், வழுக்கை தலையில் வெங்காயம் செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும், இளநரை சரியாக முளைக்கீரை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வர முடிநரை குறையும், முடி உதிர்வுக்கு நெல்லிக்காயை பவுடர் ஆக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாக வளரும் முடி உதிராது, தாமரைப்பூ கசாயம் வைத்து காலை மாலை தொடர்ந்து சாப்பிட்டு வர இளநரை மாறிவிடும், முடி வளர்ச்சியின்மை நிவர்த்தியாக செம்பருத்தி பூவே நல்லெண்ணையில் காய்ச்சி தடவி வர வேண்டும், முடி உதிர்வுக்கு காய்ந்த நெல்லிக்காயில் பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வர முடி கருமையாகும் முடி உதிர்வது நிற்கும், பொடுகு தோல் நோய்கள் குணமாக நல்லெண்ணையில் மாதுளம் சாற்றை காட்சி வர வாரம் ஒரு முறை தலைக்கழுவி வர பொடுகு தோல் நோய்கள் குணமாகும், முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர எலுமிச்சை பழ விதை மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து குளித்துவர முடி வளரும், தொட்டையில் முடி முளைக்க பூசணி கொடியின் கொழுந்து இலைகளை எடுத்து சாறு எடுத்து கசக்கி அந்த சாரை தலையில் தேய்த்துவர சொட்டை தலையில் முடி முளைக்கும், நன்றாக வளர காரட், எலுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய் அடிக்கடி பயன்படுத்தி வர வேண்டும்…!!




