நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (25). இவர் ஓராண்டுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்து விட்டு, வீட்டில் இருந்து மேற்படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு பயிற்சி மேற்கொண்டு வந்தார். கடந்த சில மாதங்களாக பிரியதர்ஷினி, மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் (ஜூன் 28) வீட்டில் இருந்த பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




