
அம்மா எனக்கு சொந்தம் அல்ல அம்மா அப்பாவுக்கு சொந்தம் இப்ப கூட அம்மா அப்பாவை விட்டுட்டு என் கூட வந்துவிடவில்லையே ஏன் அவர் கணவர் அவருக்கு முக்கியம் என்பதால்..
அதேபோல் என் மனைவி எனக்கு முக்கியம் நான் அழைத்தால் அவள் எங்கும் வருவாள். அம்மாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை அவர் கடைசி காலத்தில் கவனித்துக் கொள்வதுதான் அதை செய்வேன். ஆனால் நான் அவருக்கு சொந்தமானவன் அல்ல என் மனைவிக்கு என் மேல் உள்ள உரிமையை பாதிக்காத வரை அம்மாவுக்கு என் மேல் உரிமை உண்டு அவருக்கு நான் செய்ய வேண்டியது கடமை. ஆனால் மனைவிக்கு அப்படி அல்ல அவளுக்கு சகலமும் நான்தான் ஓரோர் உறவும் ஓரோர் வயதில் முக்கியத்துவம் பெறும். சிறுவயதில் அம்மா முக்கியம் கல்யாணம் ஆன பின்னும் அம்மா முந்தானையை பிடித்துக் கொண்டு ஒரு மகன் நடந்தால் அவன் அம்மாவின் வளர்ப்பு முழுமையாக இல்லை என்று பொருள் சமயம் வந்ததும் பால் கொடுப்பதை நிறுத்துவது போல் சமயமனம் மனைவி வந்ததும் சிறிது விளக்கவும் அம்மாவுக்கு தெரிய வேண்டும் மகன் விலகாவிட்டால் விலக்கி விடவும் தெரிய வேண்டும் மகனுக்கு அவன் கடமையை சொல்லிக் கொடுப்பவர் தான் உண்மையான முதிர்ந்த அறிவுள்ள தாய். தன் சுயநலத்துக்காக மனைவியா நானா என்று முடிவெடு என்று சொல்லும் தாய் நல்ல தாய் அல்ல மனைவிக்கு கணவன் சொந்தம் என்று ஏன் புரிய மாட்டேன் என்கிறது அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க சீதனம் கொண்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிடவா இல்லை அடுப்படியில் ஒரு எடுபிடி வேண்டும் என்றார் மகன் வாழ்க்கை துவக்க வேண்டும் என்று தானே கல்யாணம் செஞ்சீங்க அப்புறம் தாயா தாரமான்னு கேட்டா என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வியா என்கிறார்கள் சில ஆண்கள்.. இருவருக்கும் என் மேல் உரிமை இருந்தாலும் மனைவிக்கு தான் நான் சொந்தம் தாய் என்னிடம் இருந்து கடைசி காலத்தில் பராமரிப்பு எதிர்பார்க்கலாம் அவ்வளவு அந்த கடமை பங்கு போட்டுக் கொள்ள மூணு பேர் இருக்கிறோம் என் மனைவிக்கு நான் ஒருத்தன்தான் இருக்கிறேன் அதனால் என் ஒட்டுமொத்த அன்பும் மனைவிக்கு..!!