• September 24, 2023

தாயை கவனிக்க தவறிய மகளின் சொத்து பறிப்பு! உயர்நிதிமன்றம் அதிரடி!!

சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு பெற்ற தாயை நிர்கதியில் விட்ட பெண்ணின் சொத்து பத்திரத்தை வருவாய் அலுவலர் ரத்து செய்து உள்ளார். இதனை உயர் நீதி மன்றமும் உறுதி செய்து உள்ளது.

பெற்ற தாயை சரியாக பார்த்துக் கொள்ளாத மகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்தின் பத்திரத்தை வருவாய் அலுவலர் ரத்து செய்தது குறித்த உத்தரவை உயர் நீதி மன்றம் உறுதி செய்து உள்ளது. சுகுணா என்னும் பெண் அவரது தாயின் வயதான காலத்தில் பராமரித்து பார்த்துக் கொள்வதாக கூறியதாலேயே அவருக்கு அவரின் சொத்துக்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளது.

ஆனால் சுகுணா பத்திரத்தில் உள்ள நிபந்தனைகளை பின்பற்ற தவறி உள்ளார், தாயைப் பராமரிக்காமல் நிர்கதியாய் நிற்க வைத்து உள்ளார். இதனால் வருவாய்த் துறை அலுவலர் அவருக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து உள்ளார். இதனை உயர் நீதி மன்றமும் இதே தீர்ப்பினை மீண்டும் உறுதி செய்து உள்ளது.

Read Previous

மதுபானத்தை பாட்டிலில் விற்கும் போது, பாலை பாட்டிலில் விற்க முடியாதா? தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நிதிமன்றம்!!

Read Next

அரியவகை டால்பினை சமைத்து சாப்பிட்ட மீனவர்கள்., காத்திருந்த அதிர்ச்சி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular