
இன்று மருந்து ஆய்வுகள் பால் அவசியமில்லாத உணவு தேவையில்லாத உணவு என்று கருத்துக்கள் வருகின்றன உண்மையில் பால் குடிப்பது அவசியமா இல்லையா என மருத்துவர் சிவராமன் விளக்கி உள்ளார்..
20 ஆண்டுகளுக்கு முன் பால் சாப்பிடுவது நல்ல பழக்கமாகவே இருந்து வந்தது ஆனால் இன்று மருத்துவ ஆய்வுகளில் பால் அவசியமில்லாத உணவு தேவை இல்லாத உணவு என்று கருத்துக்கள் வருகின்றன இதனால் பலரும் தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு பால் குடிக்கலாமா வேண்டாமா எனக்கு குழப்பம் அடைந்துள்ளனர் அந்த வகையில் சித்த மருத்துவர் சிவராமன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் மனிதன் மட்டும்தான் தாய்ப்பால் தவிர மற்ற விலங்கின் பாலை குடிக்கிறான். இதுவே இயற்கைக்கு மாறாக உள்ளது பால் கொடுக்கும் மாடுகளுக்கு வழங்கப்படும் தீவனங்களில் பல ரசாயனம் சேர்க்கப்படுகிறது அதை நாம் சாப்பிடும் போது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது அதனால் பிரச்சனைகள் வருகிறது குழந்தைகள் பொதுவாக இரண்டு முதல் மூன்று வயதில் இருக்க கூடியவர்கள் அடிக்கடி சளி காய்ச்சல் நுரையீரல் சார்ந்த நோய்கள் ஒவ்வாமை வருவது வழக்கமாக உள்ளது இதற்கு பெரும்பாலும் பால் தான் காரணம். இருப்பினும் அதில் உள்ள வே புரோட்டின் நல்லது செய்யக்கூடியது அதே நேரம் உடல் பருமனாக உள்ள குழந்தைகளுக்கு தொடர்ந்து பால் பவுடர் கொடுப்பது அவர்களின் உடல் எடையை மேலும் கூட்டும், எனவே மருத்துவர் அறிவுரைப்படி குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும் கால்சியம் சத்து குறைவாக உள்ளது மாதவிடாய் முடிவில் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி பால்குடிக்க சொன்னால் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்..!!