திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் திடீரென உள்வாங்குவதும், வெளியே சீற்றம் அதிகமாக காணப்பட்டும் வருகிறது. இரு தினங்களுக்கு முன் அமாவாசை நாளில் இருந்து இருந்து கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. கடல் சீற்றத்தின் காரணமாக கோயில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டது. இதனால் படிக்கட்டுகள் வழியாக பக்தர்கள் இறங்க முடியாத சூழல் ஏற்பட்டது.