
ராஜஸ்தான் மாநிலத்தில் திருநங்கை ஒருவருக்கு முதன் முதலாக பிறப்புச் சான்றிதழ் வழங்கி உள்ளனர்
ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலமாக பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை இயக்குனரும் தலைமை பதிவாளருமான பன்வர்லால் பைர்வா, திருநங்கை நூர் ஷெகாவத்துக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கி உள்ளார். பின் இது குறித்து பேசிய பன்வர்லால் “ஆண் மற்றும் பெண் பிறப்பு சான்றிதழ்களுடன் திருநங்கைகளின் பிறப்பு சான்றிதழ்களும் இனி மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும்”. என்று அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும் பேசிய அவர் “திருநங்கைகளுக்கு பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்படும் ” ,என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.