
- திருப்பதி : ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 தரிசன டிக்கெட் நாளை வெளியீடு…!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் தற்பொழுது கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனை பக்தர்கள், https://tirupatibalaji.ap.gov.in என்ற திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில், தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து தரிசனம் செய்யலாம் என்று திருவிக்கப்பட்டுள்ளது.