திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 சார்நிலை கருவூலகங்களுக்கு 63 ஆயிரம் முத்திரை தாள்கள் வினியோகம்..!!

  • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களுக்கு 63 ஆயிரம் முத்திரைதாள்கள் வினியோகம்.!

திருப்பூர் மாவட்டத்தில் முத்திரை தாள் தட்டுப்பாடு இருந்தது. 7 சார்நிலை கருவூலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ௭ சார்நிலை கருவூலகங்களுக்கு 63 ஆயிரம் முத்திரை தாள்கள் வினியோகம் செய்யப்பட்டது. அரசு அலுவலகங்களில் முத்திரை தாள் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் 160 முத்திரைதாள் விற்பனையாளர்கள் உள்ளனர்.

கடந்த 2 வாரம் முன் மாவட்டத்தில் முத்திரை தாள் தட்டுப்பாடு இருந்தது.இதனால் பொதுமக்கள் முத்திரை தாள் விற்பனையாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தமிழக அரசுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.இந்நிலையில் சீராக வழங்க வலியுறுத்தி மாவட்ட கருவூலத்தில் முத்திரை தாள் விற்பனையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் திருப்பூர் மாவட்ட கருவூல அலுவலர் (முத்திரை தாள்) இதுதொடர்பாக கோவை மண்டல இணை இயக்குனருக்கும் சென்னைக்கும் தெரிய ப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அரசின் நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்துக்கு முத்திரை தாள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 20-ந் தேதி 20 ரூபாய் தாள் 40 ஆயிரம் 100 ரூபாய் தாள் 20 ஆயிரம் 5 ஆயிரம் ரூபாய் தாள் 3 ஆயிரம் எண்ணிக்கை என மொத்தம் 63 ஆயிரம் தாள்கள் திருப்பூருக்கு வந்தது. தொடர்ந்து இதனை மாவட்டத்தில் ௭ சார்நிலை கருவூலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது என கருவூலத்துறையினர் தெரிவித்தனர்.

Read Previous

ருசியான சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி..!!வாங்க தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

திண்டுக்கல்: தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்னும் 2 வாரங்களில் பொதுத்தேர்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular