திருமணமான பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்கும் சிறு சிறு விஷயங்கள்…..
• காபி,டீ குடித்த டம்ளரை கழுவப் போடுங்கள். கட்டில்/சோபாக்கு கீழே தள்ளி நாற விடாதீர்கள்.
• அலுவலகத்துக்கு மதிய உணவு எடுத்துச் சென்ற டப்பாவை கழுவப் போடாமல் பல நாட்களுக்கு பத்திரப் படுத்தாதீர்கள்.
• விடுமுறை தினங்களில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே கொஞ்சம் துணிகளை மடித்து வைக்கலாம்.
• சாப்பிட வாங்கன்னு கூப்பிட்டால், உணவுப் பாத்திரங்களை எடுத்து வந்து வைக்க உதவலாம்.அதே போல் சாப்பிட்ட பின் எடுத்து வைக்கலாம்.
• சமையலறையில் வேலையாக இருக்கையில், அழைப்பு மணி அடித்தால் யாரென்று பார்க்கலாம்.
• குளிக்க போனால் சோப்பு, ஷாம்பு, துண்டு எதுவும் எடுத்துச் செல்லாமல், அங்கு நின்று கொண்டு அதைக் கொடு, இதைக் கொடு என்று கூச்சலிட வேண்டாம்.
• காகிதக் குப்பைகளை காற்றில் பறக்க விடாமல் குப்பைத்தொட்டியில் போடலாம்.
• ஒரு அறையை விட்டு வெளியேறும் பொழுது மின்விளக்கு, மின்விசிறியை அணைக்க மறக்காதீர்கள்.
• தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டே என்ன கேட்கிறோம் என்று கூட அறியாமல் ‘உம்’ கொட்டாதீர்கள்.
• எங்கள் வீட்டு ஆட்களையும் உங்கள் வீட்டு ஆட்களை போல் நடத்துங்கள்.
• எங்களை பற்றி எங்கள் தாயிடம் புகார் கூறாதீர்கள்.
• உறவுகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அத்தையை பெரியம்மா என்றும், சித்தப்பாவை மாமா என்றும் அழைக்காதீர்கள்.




