
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பாவூர்சத்திரத்தில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் முத்துக்குமார் (29). கட்டிட தொழிலாளி. இவரது தாய் இறந்து 20 ஆண்டு ஆகிறது முத்துக்குமார் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் முத்துக்குமார் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளார். மேலும் திருமணம் ஆகவில்லை என்ற விரக்தியில் இருந்த முத்துக்குமார், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.