
திருமணம் என்பது ஜெயிப்பவர்களுக்கானது அல்ல:
1. ஒருவரையொருவர் வாக்குவாதத்தில் ஜெயிப்பதை விட, தங்கள் காதலைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் இருவருக்கானதே திருமணம்.
2. கோவப்படலாம், ஆனால், எதிரில் இருப்பவர்கள் தங்கள் பொறுமையை இழக்கும் வரை திரும்ப திரும்ப பேசக்கூடாது என்று புரிந்தவர்களுக்கானது திருமணம்.
3. திருமணம் என்பது உணர்ச்சி ரீதியாக திடமாக இருபவர்களுக்கானது. பகுத்தறிவற்ற விஷயங்களை எதிரில் இருப்பவர்கள் விரும்புவதால் செய்துவிட முடியாது.
4. திருமணம் என்பது போர்களுக்கான இடம் அல்ல. வெற்றி தோல்வியை பற்றி சிந்திக்காமல், தீர்வுகளை பற்றி சிந்திப்பதற்கான இடம்.
5. திருமணம் என்பது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும் இடம் அல்ல, ஒரு கடினமான நாளுக்குப் பிறகு நீங்கள் தேடும் பாதுகாப்பான இடம். அதை நிர்வகிக்கும் திறன் சிலருக்கே உண்டு.
6. பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்றாமல், அவற்றுக்கு தீர்வு தேடுவதை விரும்பும் இரண்டு நபர்களுக்கானது திருமணம். எதிர்வினையாற்றுவது என்பது தன்னை நிரூபிக்க முயற்சிப்பது; தீர்வு தேடுவது என்பது உங்கள் இருவரின் நலனைக் கருத்தில் கொண்டு விவேகமாக இருப்பது.
7. திருமணம் என்பது, கோபம் ஒரு சாதாரண மனித உணர்ச்சியாக பார்க்கப்படும் ஒரு இடம். ஆனால் அந்த கோபம் ஒரு அச்சுறுத்தலாக மாறாமல் இருக்க சம நிலையுடன் இருக்க வேண்டும்.
8. திருமணம் என்பது கூச்சல், அவமானம், வன்முறை மற்றும் பொருட்களை தூக்கி வீசுவதற்கான இடம் அல்ல; முதிர்ந்த உரையாடல்கள், பரஸ்பர புரிதல் மற்றும் கற்றுக்கொள்ள விருப்பம் ஆகியவற்றுக்கான இடம்.
9. திருமணம் என்பது இருவரும் தற்காப்புக்காக இல்லாமல், அமைதியாக இருக்கும்போது உணர்ச்சிகரமான பரஸ்பர விஷயங்களைப் பற்றி பேச விரும்பும் இடம்.
10. திருமணம் என்பது ஒருவரையொருவர் சலித்துக் கொள்ளாமல், தினசரி அன்பு செலுத்தும் இடம்.
11. திருமணம் என்பது பொறுமையைக் கடைப்பிடிப்பதற்கான இடம், இருவரும் ஒருவர் மீது ஒருவர் அழுத்தம் கொடுக்க கூடாது. அவரவர் எல்லைகளை மதிக்கும் இடம்.
12. திருமணம் என்பது முத்தங்கள், அணைப்புகள், ஆச்சர்யங்கள் மற்றும் அன்பான வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளும் இடம்.
13. திருமணம் என்பது பெருமை மற்றும் அகங்காரத்தை அடக்கும் இடமாகும், மேலும் இருவரும் ஒருவரையொருவர் காயப்படுத்திக் கொள்ளும்போது, ஒருவரையொருவர் அணுகி நல்லிணக்கத்தைத் தொடங்க போதுமான அக்கறை கொள்ள வேண்டும்.
14. திருமணம் என்பது கண்ணோட்டத்தின் இடம். தவறான புரிதலின் காரணமாக இத்தனை வருடங்களாக நீங்கள் கட்டியெழுப்பிய உங்கள் திருமண வாழ்க்கையையும் அழித்துவிடக்கூடாது. தெளிவான புரிதலையும், சரியான கண்ணோட்டத்தையும் உங்கள் இணையர் மீது வைத்திருங்கள்.
வலுவான திருமணங்கள் சமாதானத்தை கடைபிடிக்கும் கணவன் மற்றும் மனைவிகளால் அழகாக்கப்படுகின்றன.