மகாராஷ்டிரா: நாக்பூரைச் சேர்ந்த தம்பதியர் தங்களின் 28-வது திருமண நாளை கொண்டாடிவிட்டு அதே நாளில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோனி ஆஸ்கர் மோன்கிரிஃப்(57), அவரது மனைவி ஆனி(45) ஆகியோர் தற்கொலை செய்யும் முன் தங்களின் திருமண ஆடைகளை அணிந்திருக்கின்றனர். மேலும் அவர்கள் இறப்பதற்கு சமூக வலைத்தளத்தில் உருக்கமான வீடியோ ஒன்றையும் பதிவேற்றியுள்ளனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.




