
திருநீற்றுப்பச்சிலையில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் மைதிலி விவரித்துள்ளார் இவை சளி சைனஸ் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது..
திருநீற்றுப் பச்சிலையில் நிறைந்திருக்கக் கூடிய பல்வேறு விதமான பயன்கள் குறித்தும் அவற்றை பயன்படுத்தும் முறை குறித்தும் தெரிவித்துள்ளார் மருத்துவர்..
வியர்வை துர்நாற்றம் நோயிலிருந்து படிப்படியாக வெளிவருவதற்கு திருநீற்றுப் பச்சிலை மூலிகை பலன் தருகிறது. இவ்வாறு அதிகமாக உயிரை வெளியேறுபவர்கள் காலை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு பக்கெட் தண்ணீருக்கு இரண்டு கைப்பிடி அளவு திருநீற்று பச்சிலையை போட்டு ஊற வைக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து 30 நாட்களுக்கு பின்பற்றினால் அதிக வியர்வை வெளியேற்றம், பிரச்சனையை தீர்க்க முடியும் என அவர் கூறுகிறார். இளம் வயதில் இருக்கும் அனைத்து பாலினத்தவர்க்கும் முகப்பரு பிரச்சனை இருக்கும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு திருநீற்றுப்பச்சிலை மருந்தாக அமைகிறது அதன்படி இந்த இலையின் சாரை இரண்டு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் இத்துடன் ஒரு சிட்டிகை வசம்பு பொடி சேர்த்து கலக்கி முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் தேய்க்கலாம் இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தினால் இவை இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்கிறார் மருத்துவர்.சைனஸ் பாதிப்பால் ஏற்படும் தலைவலி ஒற்றைப் பக்க தலைவலிக்கும் திருநீற்றுப்பச்சிலை மருந்தாக பயன்படுத்தலாம் இந்த இலைகளை அரைத்து பசை பதத்திற்கு கொண்டு வந்து நெற்றியில் பற்று போட்டு தடவி வைக்கலாம் இது தலைவலியை குறைக்கும் என மருத்துவர் கூறுகிறார் வாரத்திற்கு மூன்று முறை என தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் இவ்வாறு செய்ய வேண்டும் சளி இரும்பல் தொல்லைகள் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர் அவர்கள் திருநீற்றுப்பச்சிலையில் இரண்டு ஸ்பூன் சாராக எடுத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை உணவுக்கு முன்பாக குடிக்கலாம் இதே போல இரவு உணவுக்கு முன்பாகவும் குடிக்க வேண்டும் இப்படி தொடர்ந்து குடிப்பதால் நுரையீரல் தூய்மையாகி சளி இருமல் தொல்லையில் இருந்து வெளிவர முடியும்..!!