
துளசி தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் மூலிகைகளில் முக்கியமான ஒன்று துளசி. இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. ஆனால் துளசி தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது.
மேலும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சுவாச நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபடவும் உதவும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த துளசி தண்ணீரை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.