தூங்குவதற்கு முன்பு மது அருந்திவிட்டு தூங்கினால் என்ன நடக்கும் தெரியுமா.
இந்த நவீன காலகட்டத்தில் வாழ்க்கை முறையில் சரி தொழில் முறையிலும் சரி என்னென்ன வளர்ச்சி இருக்கிறதோ அதே மாதிரி தான் இந்த குடிப்பழக்கமும் நாட்டில் வளர்ச்சியாகிக் கொண்டிருக்கிறது. அதுவும் இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும் பார்ட்டி. வாழ்ந்தாலும் பார்ட்டி செத்தாலும் பார்ட்டி. பேச்சுலர் பார்ட்டி, பர்த்டே பார்ட்டி ,மேரேஜ் பார்ட்டி ,சென்ட் ஆப் பார்ட்டி என குடிப்பதற்கு காரணம் தேடுகிறார்கள். அதுவும் இந்த பாட்டுகள் அனைத்தும் இரவில் தான் அதிகமாக நடக்கிறது. இவ்வாறு இரவில் குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். குடிப்பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது கிட்னி. அது மட்டுமில்லாமல் உடலில் பல விதமான வியாதிகள் வருவதற்கு குடிப்பழக்கம் காரணம். இரவில் மது அருந்துவதால் உறக்கம் கெடும். இதனால் உடலில் இன்சொமேனியாவை ஏற்படுத்தும். இதனால் தூங்குவது மிகவும் கடினமாக இருக்கும். இரவில் தூக்கம் கெட்டால் பல வியாதிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இரவில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு உயிருக்கே அபாயம் ஏற்படும் நிலைமை கூட வரலாம்.




