தைப்பூசத்தால் நிரம்பிய பழனி கோயில் உண்டியல்கள்..!! முருகனுக்காக பக்தர்கள் கொடுத்த காணிக்கை வசூல் எவ்வளவு?..

பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.31 கோடி..

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இங்கு கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 10ம் தேதியும், தேரோட்டம் 11ம் தேதியும் நடந்தது. நேற்று தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரொக்க பணமாக ரூ.3 கோடியே 31 லட்சத்து 92 ஆயிரத்து 776, தங்கம் 557 கிராம், வெள்ளி 21,235 கிராம், வெளிநாட்டு கரன்சி 1,153 ஆகியவை காணிக்கையாக கிடைத்தன.

Read Previous

சிந்தனையை நீங்கள் வெளியே கொண்டு வந்து விட்டால் நீங்களும் வெற்றியாளர் தான்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

13 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular