தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான ஜீவா மற்றும் அவரது மனைவி கள்ளக்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாய் விபத்து ஏற்பட்டு இருவரும் உயிர் தப்பியுள்ளனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
இந்த செப்டம்பர் 11 கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கார் விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி இருவரும் நூலிலையில் உயிர் தப்பினர், கள்ளக்குறிச்சி அம்மையகரத்தில் சாலையில் குறுக்கே வந்த நபரால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று ஜீவா கூறியுள்ளார், மேலும் குறுக்கே வந்த நபர் மீது கார் மோதாமல் திருப்பப்பட்டது இதனால் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவிக்கு எந்த காயங்களின்றி தப்பித்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி காவல்துறை சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விபத்திற்கான காரணத்தை விசாரணையில் மூலம் மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்தனர் மேலும் நடிகர் ஜீவா மற்றும் அவரது மனைவி ஆரோக்கியமாக உள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது..!!




