கோவை மாவட்டம் கொத்த கவுண்டர் புதூர் என்ற பகுதியில், ஏழு நபர்கள் ஒரே வீட்டில் வசித்து லாரி ஓட்டி வந்த நிலையில் அழகு ராஜா என்ற லாரி ஓட்டுனர் சில நாட்களுக்கு முன்பு தன் லாரி விபத்துக்குள்ளானதை நினைத்து, நேற்று இரவு எப்போதும் போல் தூங்கும் நேரத்தில் அழகுராஜா மட்டும் பெட்ரோலை தன் மீது ஊற்றிபற்ற வைத்துக் கொண்டார், மேலும் பெட்ரோல் கேனை வீட்டுக்குள்ளே தூக்கி எரிந்ததால் வீட்டில் தீ பற்றி சேதாரங்கள் ஏற்பட்டு உறங்கி கொண்டிருந்த ஆறு நபர்களுக்கும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள் மேலும் நான்கு பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் மூன்று பேர் தீவிர சிகிச்சையில் உள்ளார் இதனால் அப்பகுதியில் மக்களிடையே பெருஅச்சம் நிலவியுள்ளது..




