நம் அனைவரும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய பொருட்களில் ஒன்றாக இருப்பது தான் இந்த பூண்டு. இதில் என்னென்ன நன்மைகள் நிறைந்துள்ளது என்பது குறித்து இப்பதிவில் தெளிவாக காண்போம்.
பூண்டு மிக சிறந்த ஒரு கிரிமி நாசினியாகும், அதிலும் மலை பூண்டை காட்டிலும் சிறு பூண்டு தான் சத்துக்கள் அதிகளவில் கொண்டுள்ளது. பூண்டில் உள்ள அலிசின் என்கின்ற ஆர்கானோ சல்பர் பொருள் ரத்த கொதிப்பு நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதால் ரத்த ஓட்டம் சரியான அளவில் செல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த பூண்டு கொழுப்பு படிதலை முற்றிலும் தடுக்கின்றது.
நோய் எதிர்ப்பாற்றால் தரும் உணவுகளில் ஒன்றாக இந்த பூண்டு திகழ்கிறது. சுவாசக் கோளாறுகள். அஜீர்ண கோளாறுகள், ஒவ்வாமை, சளி, காய்ச்சல் ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இரும்பு சத்து மற்றும் துத்தநாகத்தின் அளவு உடலில் உறிஞ்சப்படுவதை பூண்டு அதிகரிக்கிறது.