இட்லி என்பது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் ஒரு உணவாகும். இட்லியை பிடிக்காது என்பவர்கள் வீட்டில் மாவு சரியாக அரைக்காமல் இட்லி ஊத்துவது இதற்கு காரணம். பஞ்சு போல இட்லி இருக்க இந்த மெத்தடை ட்ரை பண்ணி இட்லி மாவு அரைச்சு பாருங்க உங்க வீட்ல இருக்க எல்லாரும் பாராட்டுவாங்க.
4 கப் இட்லி அரிசி
1 கப் முழு வெள்ளை உளுந்து
1/2 கப் ஜவ்வரிசி
எல்லாவற்றையும் தனியாக 5 மணிநேரம் ஊறவைத்து கொல்லுங்கள்.முதலில் ஊறவைத்த உளுந்தை கிரைண்டரில் போட்டு 25 நிமிடத்திற்கு அரைத்து அரைக்கும் போது இரண்டு ஐஸ் கட்டிகளை போட்டு அரைத்தால் இட்லி நன்றாக பஞ்சு போல இருக்கும்.
பிறகு அரிசி ஜவ்வரிசி ரெண்டையும் சேர்த்து அரைத்து,உளுந்துடன் கலந்து உப்பு சேர்த்து மாவை நன்கு பிணைந்து 8 மணிநேரம் புளிக்க விடவும்.
பிறகு இட்லி செய்து பாருங்கள். இட்லி பஞ்சு போல இருக்கும்.




