நள்ளிரவில் நாய் குரைப்பதற்கு இதெல்லாம் தான் காரணமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

பொதுவாக தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள் பகலில் எந்தவிதமான தொந்தரவும் செய்யாமல் இரவில் மாத்திரம் குறைத்து கொண்டே இருக்கும்.

வீதியில் வாகனம் செல்லும் போது, இரவில் யாராவது நடந்து செல்லும் போது என பாதையில் ஒருவரையும விட்டு வைக்காமல் துரத்திக் கொண்டிருக்கும்.

சில சமயங்கள் இரவில் நாய்கள் அதிகமாக ஊளையிடுவதை பார்த்திருப்போம். இதனால் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாம் திடீரென விழித்திருக்கலாம்.

இப்படி ஏன் நாய்கள் இரவில் அதிகமாக குரைக்கின்றன? இதற்கு என்ன உண்மையான காரணம் என்ன?என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

நாய்கள் ஏன் இரவில் குரைக்கின்றது?

 

1. இரவு நேரங்களில் தெருக்களில் இருக்கும் நாய்கள் மட்டுமன்றி, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் சில சமயங்களில் ஊளையிடும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மரணத்தை முன்கூட்டியே அறிவிக்கும் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகின்றது.

2. தெரு நாய்கள் தங்களின் கூட்டத்தில் இருக்கும் மற்ற நாய்களுக்கு சிக்னல் கொடுக்கும் விதமாக தான் இரவில் குரைக்கின்றது என ஆய்வுகளின் மூலம் கண்டயறியப்பட்டுள்ளது. அது தவிர, சுற்றி உள்ள நாய்களுடன் உரையாடும் விதமாகவும் நாய்கள் குரைக்கலாம் என சொல்லப்படுகினறது.

3. சில இடங்களில் நாய்கள் சண்டையிடும். இப்படி நடந்து கொள்வது சில நாய்களுக்கு பிடிக்காதாம். இது போன்று பிடிக்காத சூழலில் நாய்கள் இருக்கும் போது அதனை வெளிகாட்டும் விதமாக குரைக்குமாம்.

4. இந்த எல்லை தன்னுடையது என்றும், மற்ற நாய்கள் இங்கு ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கும் விதமாக நாய்கள் இரவில் குரைத்து கொண்டிருக்கும்.

5. சுற்றுச்சூழலில் நடக்கும் சிறிய மாற்றங்களை கூட நாய்களால் இலகுவாக உணரும். அதிலும் குறிப்பாக பட்டாசு வெடிப்பது, பார்ட்டிகளில் எழுப்பப்படும் அதிக ஒலி, வாகனங்களின் ஹாரன், சைரன் ஆகிய சத்தங்களை எரிச்சலடைய வைக்கும்.

6. நாய்களின் உடலில் ஏதாவது காயங்கள் இருந்தால் அதன் வலியால் நாய்கள் அசௌகரியத்தை அனுபவிக்கும். இதனை வெளிப்படுத்தும் விதமாக இரவில் குரைக்கும். சில நாய்கள் பகல் முழுவதும் தேடி அலைந்து உணவுகள் கிடைக்காவிட்டால் இரவில் பசியுடன் உறங்க முடியாமல் குரைத்து அதன் ஆதங்கத்தை வெளிகாட்டும்.

Read Previous

மாதவிடாய் தாமதமாக இதுகூட காரணமாக இருக்கலாம்..!! தெரிந்து கொள்லாமே..!!

Read Next

கொல்கத்தாவில் வெற்றி வாகை சூடியது யார்..!! விறுவிறுப்பான போட்டியின் முடிவு என்னனு தெரியுமா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular