நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றி..!!

  • நாகாலாந்து வரலாற்றில் முதல் பெண் எம்எல்ஏ. ஹேக்கானி ஜக்காலு வெற்றி.!

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மேகாலயா நாகலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த 16-ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. அதே போல் தலாக 60 தொகுதிகளைக் கொண்டு உள்ள நாகாலாந்து மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி 27 ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த 3 மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. திரிபுரா நாகாலாந்து மாநிலங்களில் ஆளும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில் நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார். திமாபூர்-3 தொகுதியில் என்டிபிபி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஹேக்கானி ஜக்காலு வெற்றி பெற்றார். நாகலாந்து மாநிலத்தில் பாஜக கூட்டணி 33 இடங்களிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி 03 இடங்களிலும் நாகாம 02 மற்றவை 22 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது.

Read Previous

திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு..!!

Read Next

ருசியான சில்லி கார்லிக் நூடுல்ஸ் செய்வது எப்படி..!!வாங்க தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular