
தடை செய்யப்பட்ட புகையல்களை நாமக்கல் மாவட்டத்திற்கு கடத்தி வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது..
நாமக்கல் மாவட்ட இன்ஸ்பெக்டர் போலீஸ் கபிலன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாமக்கல் பேருந்து நிலையம் அருகில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கார் ஒன்றை சோதனை செய்தனர், அச்சோதனையில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை கண்டறிந்து எடுத்துள்ளனர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடகவைச் சேர்ந்த முத்துக்குமார் மற்றும் மாதேஸ்வரன் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று அப்படி பயன்படுத்தினால் காவல்துறை அவர்களை கைது செய்து அதற்கான தண்டனை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்..!!